உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்,
கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்
நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
புது நாயகனாய் நீ வந்தாயே
செவ்விதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே
தோள்களில் கொடியாய் தவழ்ந்திருப்பேன்
உன்னை தொடர்ந்திருப்பேன் என்றும் துணை இருப்பேன் பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகல் இரவாய் நான் படைத்துவைப்பேன்
முன்னழகோடு பின்னழகும்
என் மனச்சிமிழில் நான் அடைத்துவைப்பேன்
ஆனந்த கடலின் அலையாவேன்
உன்னை ஆனி பொன்னுடல் சிலை என்பேன்
உள்ளம் ஒரு கோவில்
Friday, August 22, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி