Monday, August 25, 2008

என்னைப் பார்த்து ...

என்னைப் பார்த்து
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்


உன்னை பார்த்து
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்

ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
என்னைப் பார்த்து ....

மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் மனதை பெற வேண்டும்
கன்னியின் மனதை பெற வேண்டும்

உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

செக்கச்சிவந்த கன்னமிரண்டு
சக்கரையோ இல்லை கற்கண்டோ
சக்கரையோ இல்லை கற்கண்டோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ இல்லை காவலனோ
பாவலனோ இல்லை காவலனோ

என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
எதுவும் நானாகும் !
எதுவும் தேனாகும்

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி