Tuesday, September 16, 2008

சிலர் குடிப்பது போலே ...

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

மதுவுக்கு ஏது ரகசியம் ?
அந்த மயக்கத்தில் எல்லாம் அவசரம்
மதுவில் விழுந்தவன் வார்த்தையை
மறுநாள் கேட்பது அவசியம் !
அவர் இவர் எனும் மொழி
அவன் இவன் என வருமே
நாணமில்லை வெட்கமில்லை
போதை ஏறும் போது ந‌ல்ல‌வ‌னும் தீய‌வ‌னே
கோப்பை ஏந்தும் போது

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார்

புகழிலும் போதை இல்லையோ
பிள்ளை மழலையில் போதை இல்லையோ
காதலில் போதை இல்லையோ
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ
மனம் மதி அறம் நெறி தரும் சுகம் மது தருமோ ?
நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு
நிம்மதியை தேடி நின்றால்
உண்மை சொல்லிப் பாரு !

சிலர் குடிப்பது போலே நடிப்பார்
சிலர் நடிப்பது போலே குடிப்பார்
சிலர் பாட்டில் மயங்குவார்
சிலர் பாட்டிலில் மயங்குவார் !

பாடல் :கண்ணதாசன்

இசை :எம் .எஸ் .விஸ்வநாதன்

பாடியவர் :டி .எம் . சௌந்தராஜன்

1 comment:

Information said...

சூப்பர் பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி