Tuesday, September 30, 2008

நேருக்கு நேராய் .....

நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்
நேர்மை திறமிருந்தால்
(நேருக்கு நேராய் )

உழைப்போர் யாவரும் ஒன்று
பெரும் புரட்சிகள் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும் நடக்காது
(நேருக்கு நேராய் )

பட்டினியால் தினம் ஒட்டிய வயிறு
பாதையில் தவிக்குதடா
சில பாவிகள் ஆணவம்
மக்களின் உயிரை
தினம் தினம் பறிக்குதடா
வாட்டத்தை மாற்றட்டும் இல்லையேல் மாற்றுவோம்
தீமைகள் யாவையும் கூண்டிலே ஏற்றுவோம்
(நேருக்கு நேராய் )

நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
(நேருக்கு நேராய் )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி