Tuesday, December 30, 2008

உன்னை அழைத்தது யாரோ ...

உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ

சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே
(உன்னை அழைத்தது யாரோ )

வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே
(உன்னை அழைத்தது யாரோ )

பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திட்ட வேளையிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே
(உன்னை அழைத்தது யாரோ )

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அதி பயங்கர தீவிர ரசிகையாக இருக்கீங்க அம்மா..

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி