உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
உன்னை அழைத்தது யாரோ
அவர் ஊர் எதுவோ பேர் எதுவோ
சின்ன வயதினிலே நான் எண்ணிய எண்ணங்களே
திண்ணம் அடைந்து சிதறிடும் முன்னே
(உன்னை அழைத்தது யாரோ )
வட்ட வடிவ நிலாவிலே
ஒளி வந்து உலகினில் பாயுதே
அந்த அழகினை காணவே
நீ வந்து அமர்ந்திட்ட போதிலே
(உன்னை அழைத்தது யாரோ )
பாயும் புயலதின் வேகத்திலே
அங்கு பாய்ந்து வருகின்ற மின்னலிலே
நீயும் பயந்து ஒளிந்திட்ட வேளையிலே
இங்கு வாவென குயில் கூவுதல் போலே
(உன்னை அழைத்தது யாரோ )
Tuesday, December 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
அதி பயங்கர தீவிர ரசிகையாக இருக்கீங்க அம்மா..
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி