Sunday, November 16, 2008

வில்லேந்தும் வீரரெல்லாம் .....

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
எனை வெற்றி பெற முடியாது
நீர் கற்ற வித்தையும் செல்லாது
(வில்லேந்தும் )

அகம்பாவத்தினாலே
எனை அலட்சியம் செய்யாதே
வீண் அகம்பாவத்தினாலே
எனை அலட்சியம் செய்யாதே
இந்த ஜகமே புகழுவதால்
எனை மதியாமல் உளறாதே


எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே
எந்நாளும் ஆடவரை ஏளனமாய் எண்ணாதே

என்ன வேனும் துரையே?
இஷ்டம் போலே கேள் இனியே ...
பன்னிரண்டு போட வேனும்
அது தானே ஜெயம் காணும்
ஈராறும் பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு
ஈராறும் பன்னிரண்டு
ஏங்குதே உன் கண்ணிரண்டு

வீராப்பு பேசி வந்த பூரோப்பு ராஜாவை
வெட்டிடச் சொல்லு மண்
வெட்டிடச் சொல்லு
வீராதி வீரனென்று சோம்பேறியாய் திரிந்தால்
கட்டிடச் சொல்லு மரத்தில்
கட்டிடச் சொல்லு

மதியை இழக்கிறார் மனப்பால் குடிக்கிறார்
தலை விதியால் கால சதியால் வந்து
தனியே வாடுறார் (மதியை )
நிதியோடு வாழும் செல்வந்தர் யாவும்
தனியாய் பாவம் வாழ்கிறார்
இனியேது வாழ்வில் செல்வம் என்றாலே
நிலையே மாறி ஏங்குகிறார்
விதியால் கால சதியால் வந்து
தனியே வாடுறார்
(மதியை )

வில்லேந்தும் வீரரெல்லாம்
வீழ்ச்சி பெற்றார் பகடையிலே
என்ன வேனும் துரையே
இஷ்டம் போலே கேள் இனியே !
அன்னமே டௌலக்கி
என் ஆசையான கற்கண்டு
எண்ணம் போலவே இன்பம் காணவே
போட வேண்டுமே ரெண்டு
...................

1 comment:

Information said...

நல்ல பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி