Sunday, November 16, 2008

சொக்கா போட்ட நவாபு ...

லா... லா... லா.
லா ...லா..லா
லல்லல லல்லல லல்லல லல்லல
லல்லல லா .....

சொக்கா போட்ட நவாபு
செல்லாது ஒங்க ஜவாபு
நிக்கா புருஷன் போலே வந்து
ஏமாந்தும் என்ன வீராப்பு?
(சொக்கா போட்ட நவாபு )

கண்ணாலே மயங்கிடுவார்
கத்திரி மீசை ராஜாவே !
அண்டாவை விளக்கி விளக்கி
அசந்து போன கூஜாவே!

சூராதி சூரர்களே !
வீராதி வீரர்களே !
சொல்லாமல் ஓடிப்போன
குல்லாப் போட்ட ராஜாவே !
சொக்கட்டான் ஆசையினாலே
சொக்கியே வீழ்ந்தவரே !
உள்ளதை நான் சொல்லப் போனால்
உங்களுக்கு ஏன் பொல்லாப்பு ?
(சொக்கா போட்ட நவாபு )

எட்டாத கனியை நம்பி
ஏங்கி ஏங்கி மயங்காதே
எந்நாளும் பெண்ணாசையால்
ஏமாந்து தொலையாதே
ஜோரான ஆண்சிங்கம் போலே
துள்ளியே வந்தவரே
லோகத்திலே மாதர் முன்னே
சூரத்தனம் செல்லாது

(சொக்கா போட்ட நவாபு )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி