Sunday, November 16, 2008

கந்தனுக்கு மாலையிட்டாள் ...

கந்தனுக்கு மாலையிட்டாள் ,
கானகத்து வள்ளி மயில்
கல்யாண கோலத்திலே
கவிதை சொன்னாள் காதல் குயில்


சொக்கருடன் மீனாட்சி
சொக்கி நிக்கும் திருக்காட்சி
காணவந்த கண்கள் ரெண்டும் ,
காதலுக்கு ஒரு சாட்சி


பூவோடு போட்டும் தந்தேன் ,
ஒரு பூவைக்கு வாழ்வு தந்தேன்
சலங்கை கட்டும் இல்லத்திலே ,
தாலி கட்டும் நடக்க கண்டேன்

தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !


பாடல் : முத்துலிங்கம்
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர் :வாணி ஜெயராம்

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

தேவனை தேடி சென்றேன் -
தேவியுடன் அவனிருந்தான்
வீணையுடன் நானிருந்தேன் ,
விதியை எண்ணி பாடுகின்றேன் !




M G R பாட்டே அல்ல

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி