Thursday, November 27, 2008

ஒரு நாள் கூத்துக்கு ....

மோகம் பிறந்ததம்மா முந்தா நாள் பார்க்கையிலே
நேசம் பிறந்ததம்மா நேத்து நீ நடக்கையிலே
ஏக்கம் பிறந்ததம்மா இன்று நீ சிரிக்கையிலே
இன்பம் பிறக்குமம்மா நாளை இந்த வேளையிலே


ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

குண்டு விழி மண்டு மொழி
சிண்டு முடி நண்டு நடை போட்டான் பாரம்மா
கட்டு விழி முத்து மொழி
சித்திரத்தில் உத்தரவை கேட்டான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

ராணியம்மா ஆசைப்பட்டா ஆடச்சொல்லி ஆணையிட்டா
மறுப்பேச்சென்ன மூச்சென்ன வந்தேனே என்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
அவன் யாரென்று பேர் சொல்லி நெஞ்சோடு நின்றான்
சுற்றத்தாரின் மத்தியிலே
கத்துவெச்ச வித்தைகளை படிச்சான் பாரம்மா
பொம்பளைய தோற்க வெச்சு
பக்கம் வந்து நிக்கவெச்சு சிரிச்சான் பாரம்மா

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

பாட்டுக்கெல்லாம் தலை அசைச்சான்
பாக்குறவன் அதிசயிச்சான் அவன் ஆட்டத்தில்
மோகத்தை உண்டாக்கி வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான் இந்த கூட்டத்தில்
நோட்டத்தை உன் மேல வெச்சான்
புன்னகையும் பொன்னகையும் மின்னலொரு
அன்ன மகள் உசுரா நெனச்சானே
சொல்லியதை சொன்னபடி எண்ணியதை எண்ணப்படி
நெனச்சா முடிப்பானே
புலி வேஷம் போட்டவன்தான் பூனையை போல் மாறி வந்தான்
எலி வேட்டைக்கு நாள் வைத்து போராட வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
வெளி வேஷத்தை மோசத்தை பொய்யாக்க வந்தான்
கம்பு சண்டை வம்பு சண்டை
கத்தி சண்டை குத்து சண்டை போட்டான் தனியாக
பத்து பேரு மத்தியிலே ஒருத்தனாக
சுத்திவந்து ஜெயிச்சான் முடிவாக

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே

3 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நான் உங்கள் கூட வர சம்மதமா?

அழகான தொகுப்பு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு நாள் கூத்துக்கு மீசையை வெச்சான் மேடையிலே
மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே
ஆஹா மறுநாள் பார்க்கையில் மாறி இருந்தான் ஜாடையிலே





ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

Information said...

மிகவும் அருமையான பாடல்.

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி