Sunday, November 16, 2008

ஆம்பளைங்களா ....

சே ச் சே ச் ச ச ச் ச ச ச ச .....
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ?
ஓர் ஆறு கஜம் சேலை கட்டி
நாலு வளை போடுங்களே
ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ?

வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா?
புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா ?
மேலுதட்டில் மீசை வைச்ச பொம்பளைங்களா ?
வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா?
(ஆம்பளைங்களா )

அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க
நல்ல ஆழமான வேலை செய்ய ஏர் உழுவாங்க
இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டீங்க
இனி இளிச்சவாயன் பட்டம் வாங்க பொறந்து விட்டீங்க
(ஆம்பளைங்களா )

காந்தி என்ற வீர மகன் பொறந்த நாடுங்க
நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க
நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க
எனக்கு நேரமில்லை சீக்கிரமா வளையல் போடுங்க
(ஆம்பளைங்களா )

1 comment:

Information said...

சூப்பர் பாடல்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி