Saturday, June 11, 2011

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு  தாயென்றும் தாரமென்றும்  பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை


தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை  செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை  
(காமுகர் நெஞ்சில் ..)


காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல  செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்  
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)






 

4 comments:

Dr.V.K.Kanniappan said...

இப்பாடலை கேட்கவும், யுட்யூபில் பார்க்கவும் முடிய்வில்லையே!
வ.க.கன்னியப்பன்

பூங்குழலி said...

https://www.youtube.com/watch?v=SOvWedyOW6g


இந்த லிங்க்கை முயற்சி செய்யுங்கள்

Dr.V.K.Kanniappan said...

நீங்கள் கொடுதத இணைப்பில் பாடலைக் கேட்டேன். திரைப்படமும் பார்த்தேன். பிறன்மனை நயவாமையும், ஒரு தலிக் காதலும் (காமமும்) எவ்வளவு தீயது என்று திரைப்படத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. கதை வசனமும், பாடல்களும் கவிஞர் கண்ணதாசன் தான். மிகவும் அருமை.

தீயவர் தோள்களில் பாழ்படும் அன்றோ என்பதில் ’தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ’ என்று வருகிறது.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்

பூங்குழலி said...

நன்றி கன்னியப்பன் ..மாற்றிவிட்டேன்

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி