Saturday, February 26, 2011

ஆனந்தமாய் வாழ வேண்டுமே

மாநிலத்தின் இருள் நீங்க
வானில் வரும் ஜோதி
மன இருளும் நீங்கிடவே
அருள்வாய் நீயே

ஆனந்தமாய் வாழ வேண்டுமே
மாந்தர் ஆனந்தமாய் வாழ வேண்டுமே
நாட்டில் அமைதி சூழ
பசியும் பிணியும் வலியுமே
அகல வேண்டுமே
(ஆனந்தமாய்...)


அன்பு மார்க்கம் கண்ட அறிவின் தீபமே
மக்கள் அகத்தின் அழுக்கு என்றும் கோபதாபமே
(ஆனந்தமாய் ..)


ஒடுங்கி கிடைத்த நெஞ்சின் உணர்சசி கொஞ்சவே
உயிரை அள்ளும் பாடல் தந்த கவிதை மன்னனே
உந்தன் உள்ளம் கண்ட கனவுகளும் பலித்த வாயிலே
கல்வி அறிவு மூட்டியே
(ஆனந்தமாய் ...)


மலர்ந்த முகத்தை காட்டும் சிவந்த ரோஜாவே
சிரித்து
மலர்ந்த முகத்தை காட்டும் ரோஜாவே
உனைப் போல மலர்ந்த முகத்தை காட்டும் மாந்தர் அனைவரும்
வாழ்வில் வளமும் மிஞ்சியே

வாழ்வில்
ஆனந்தமாய் வாழ வேண்டுமே









http://www.youtube.com/watch?v=bAR2otSAdKo&NR=1

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி