Wednesday, November 11, 2009

முத்து போலே ....

முத்து போலே மஞ்சள் கொத்து போலே
முழு நிலவே நீ பிறந்தாய் எங்கள் வீட்டிலே
(முத்து போலே )

கஷ்டம் தீர்ந்தது, உன்னாலே கவலை ஓய்ந்தது
கண்மணி உன் தந்தை வாழ்வில் இன்பம் சேர்ந்தது
தொட்டதெல்லாம் துலங்கிடும் வேளை வந்தது
உன்னை பெற்ற அன்னை பெருமை பெறும் வேளை வந்தது
(முத்து போலே)

கட்டித் தங்கமே என் ஆசை கனவு யாவுமே
கனிந்து பிள்ளை உருவில் வந்த செல்வமே
கண்ணை காக்கும் இமையைப் போல் உன்னை வாழ்விலே
காலமெல்லாம் காத்திருந்து மகிழ்வோமடா
(முத்து போலே )

No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி