Friday, July 18, 2008

தம்பிக்கு ஒரு பாட்டு

பட்டுக் கண்ணே ,செல்ல பாப்பா

நல்ல தம்பி, வெல்லக் கட்டி ,சுட்டி பையா

தம்பிக்கு ஒரு பாட்டு

அன்பு தங்கைக்கு ஒரு பாட்டு

வாழ்வில் நம்பிக்கை வளர்ப்பதற்கு உதவும்

நான் சொல்லும் கதை பாட்டு



ஒரு மேதை பகல் வேளை

கையில் விளக்குடன் சென்றாராம்

மனிதன் எங்கே காணவில்லை

தேடுகிறேன் நான் என்றாராம்

பிறப்பால் வளர்ப்பால் இருப்பவர்கள் எல்லாம்

மனிதர்கள் அல்ல என்றாராம்

இனத்தால் அல்ல மனத்தால் மட்டும்

வாழ்பவன் மனிதன் என்றாராம்

(தம்பிக்கு ஒரு பாட்டு )



கையிரண்டு காலிரண்டு

கடவுள் கொடுத்தான் மனிதருக்கு

இதயம் மட்டும் ஒன்று வைத்தான்

சிந்தனை ஒரு வழி செல்வதற்கு

உயர்ந்தவர் யாரும் சுயநலமிருந்தால்

தாழ்ந்தவர் ஆவார் தரத்தாலே

உழைப்பால் பிழைப்போர் தாழ்ந்திருந்தாலும்

உயர்ந்தவர் ஆவார் குணத்தாலே
(தம்பிக்கு ஒரு பாட்டு )


No comments:

Post a Comment

உங்கள் வருகைக்கு நன்றி