Saturday, June 11, 2011

காமுகர் நெஞ்சில் நீதியில்லை

காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு  தாயென்றும் தாரமென்றும்  பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை


தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை  செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை  
(காமுகர் நெஞ்சில் ..)


காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல  செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்  
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)