Showing posts with label கண்ணன் என் காதலன். Show all posts
Showing posts with label கண்ணன் என் காதலன். Show all posts

Thursday, March 26, 2009

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும் ....

கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
டக்கு முக்கு திக்கு
டக்கு முக்கு திக்கு
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி


தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
தட்டெழுத்துக்காரி குட்டு வெளி ஆனால்
கொட்ட கொட்ட முழிப்பாளோ
அம்மாடி திட்டம் இட்டு நடிப்பாளோ
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
பட்டணத்தை பார்க்கும் பட்டிக்காடு போலே
தட்டு கெட்டு தவிப்பாளோ
அம்மாடி வெட்டி வெட்டி நடப்பாளோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி
கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்

தக்காளி பழமே தள தள உடம்பில்
தக்காளி பழமே தள தள உடம்பில்
எக்காளம் ஏனடியோ ? உனக்கு இக்கோலம் ஏனடியோ ?
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காலும் உணர்ந்த அத்தான் இடத்திலே
முக்காடு ஏனடியோ ?உனது முத்தாரம் நான் அடியோ

அப்பப்பா இவள் ஒரு பொய் பிறவி
அம்மம்மா இவள் ஒரு புது பிறவி

ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
ஏழைகள் மனதில் ஒளி விடும் காதல்
கொடி கட்டி பறக்காதோ
இந்த கோட்டைக்கு அழைக்காதோ
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
இதயங்கள் சேர்ந்து இளமையில் கலந்து
கெட்டி மேளம் கொட்டிடாதோ
வாழ்வை புட்டு புட்டு சுவைக்காதோ


கெட்டிக்காரியின் பொய்யும் புரட்டும்
டக்கு முக்கு திக்கு தாளம்
எட்டு நாளிலே புரிஞ்சு போகும்
டக்கு முக்கு திக்கு தாளம்
ல ல ல ல ல ...

Monday, June 2, 2008

பாடுவோர் பாடினால் ...

பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்

பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
(பாடுவோர் பாடினால்)

பாதம் சிவந்திருக்கும் பாவை செந்தாமரை
பார்வை குனிந்திருக்கும் புருவம் மூன்றாம்பிறை
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
புத்தம் புது மலர் செண்டு
தத்தி நடமிட கண்டு
மேடை வந்த தென்றல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
ஆடை கொண்ட மின்னல் என்றேன்
( பாடுவோர் பாடினால் )

Saturday, May 24, 2008

மின்மினியை கண்மணியாய்.....

மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
மின்மினியை கண்மணியாய்
கொண்டவனை என்னிடமே
தந்தாள் உன் அன்னை உன்னை
ஹோ ஹோ ஹோ
சச்சா ம்ம்மா பாப்பா
ல ல ல ல...
சச்சா ம்ம்மா பாப்பா
சச்சா ம்ம்மா பாப்பா

அழகு மகன் மழலை மொழி
தென் பொதிகை செந் தமிழோ
அழகு மகன் மழலை மொழி
தென் பொதிகை செந் தமிழோ
இளமைதான் சிறு கதையோ
இதயமதை எழுதியதோ
இளமைதான் சிறு கதையோ
இதயமதை எழுதியதோ
முத்து முகம் முழு நிலவோ
முப்பது நாள் வரும் நிலவோ (சச்சா )



மணி பயல் சிரிப்பினில்
மயக்கிடும் கலை படைத்தான்
பசி குரல் கொடுக்கையில்
புது புது இசை அமைத்தான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
விழித்ததும் தாய் முகம் பார்த்திருப்பான்
மூடிய சேலையில் பால் குடிப்பான்
(சச்சா

சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்
இருப்பதை கொடுப்பதில் தகப்பனின் பேர் எடுப்பான்
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
தலைமகன் கலைமகள் புண்ணியமோ
தாய் குலம் வழங்கிய சீதனமோ
(சச்சா)

Saturday, May 17, 2008

கண்கள் இரண்டும் ....

கண்கள் இரண்டும் விடிவிளக்காகஅப்புறம்..
கட்டழகு மட்டும் வெட்ட வெளியாகஅப்புறம்..
கைகளிரண்டும் தொட்ட சுகமாகஹா....
கலந்திருப்போமே யுகம் யுகமாக..
(கண்கள்)


மழைத்துளி விழ விழ முத்து விளையும்ஆஹா..
பனித்துளி விழ விழ மொட்டு மலரும்ஓஹோ..
தேன் துளி விழ விழ இதழ் சிவக்கும்
உண்ண உண்ண என்னென்னவோ இன்பம் பிறக்கும்
கனிச்சுமை கொண்டு வந்த கொடி வளையும்ஆஹ,..கன்னியிடை

அல்லித்தண்டு மெல்ல நெளியும்ஓஹோ..
மதுக்கிண்ணம் ததும்பிட மலர் சிரிக்கும்
புதுப்புது கலைகளில் துயில் மறக்கும்
(கண்கள்)


முத்தம் என்ற புத்தகத்தில் எத்தனை பக்கம்
எண்ணி எண்ணிப் பார்த்தால் எத்தனை வெட்கம்
இருட்டிலும் படித்திடும் எழுத்தல்லவோ
சொல்லாமல் புரிகின்ற பொருள் அல்லவோ


சின்னம் கொண்ட கன்னங்களில் காயமிருக்கும்ம்ம்..
மன்னன் சொன்ன தீர்ப்பினில் நியாயமிருக்கும்
இலக்கணம் வகுப்பதும் இரவல்லவோ
பின்னோடு வருகின்ற உறவல்லவோ

Thursday, May 15, 2008

சிரித்தாள்............

சிரித்தாள் தங்கப் பதுமை
அடடா அடடா என்ன புதுமை
கொடுத்தேன் எந்தன் மனதை
வளர்த்தேன் வளர்த்தேன் இந்த உறவை
(சிரித்தாள்)


மார்கழிப் பனி போல் உடையணிந்து -
செம்மாதுளங்கனி போல இதழ் கனிந்து
கார்குழலாலே இடையளந்து - நீ
காத்திருந்தாயோ எனை நினைந்து


அழகெனும் வடிவில் நிலையிழந்தேன் -
இந்தஆண்மகன் பிடியில் எனை மறந்தேன்
பழகியும் ஏனோ தலை குனிந்தேன் -
இன்றுபருவத்தின் முன்னே முகம் சிவந்தேன்
(சிரித்தாள்)


கயல்விழி இரண்டில் வயல் அமைத்து -
அதில்காதல் என்றொரு விதை விதைத்து
காலமறிந்து கதிர் அறுப்போமா
காவிய உலகில் குடியிருப்போமா


பஞ்சணைக் களத்தில் பூவிரித்து -
அதில்பவள நிலாவை அலங்கரித்து
கொஞ்சிடும் இரவை வளர்ப்போமா -
சுகம்கோடிக் கோடியாய்க் குவிப்போமா
(சிரித்தாள்)