Showing posts with label தாயின் மடியில். Show all posts
Showing posts with label தாயின் மடியில். Show all posts

Thursday, August 28, 2008

பெண்ணே என்று ..

பெண்ணே என்று சொல்லவா
கண்ணே என்று சொல்லவா
பால் போன்ற மனதினில் ஏக்கமா
பகலிலும் பொய்யான தூக்கமா
(பெண்ணே)


சுருண்ட கூந்தல் காற்றினில் ஆட
துள்ளும் கால்கள் சிறு நடை போட
மருண்டு நின்றாய் மானென விழித்தாய்
மஞ்சள் முகத்தை ஏனடி கவிழ்த்தாய்
(பெண்ணே)


சின்ன இடையைக் கண்களில் அளப்பான்
சிவந்த இதழில் வண்டென குதிப்பான்
என்று நினைத்து ஏங்குகிறாயோ
ஏங்கி ஏங்கி தூங்குகிறாயோ
(பெண்ணே)


தொட்ட சுகமே இத்தனை என்றால்
தொடரும் நாளில் எத்தனை வருமோ
சிட்டு விழியே சித்திர முகமே
வீரன் வருவான் பொறுத்திரு மனமே
(பெண்ணே)

Monday, August 25, 2008

என்னைப் பார்த்து ...

என்னைப் பார்த்து
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும் எதுவும் நானாகும்


உன்னை பார்த்து
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும் எதுவும் தேனாகும்

ஓவிய‌ப் பாவை பூவிதழ் தேவை
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
கால‌மெல்லாம் நான் வ‌ர‌லாமா
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை
காத‌ல் த‌லைவ‌ன் கைக‌ளிலே
என் க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
க‌ட்ட‌ழ‌கை நான் த‌ர‌லாமா
என்னைப் பார்த்து ....

மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
மைவிழி சிட்டு ம‌ல்லிகை மொட்டு
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கைய‌ருகே கொஞ்ச‌ம் வ‌ர‌ வேண்டும்
கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் கண்கள் பட்டு கைகள் தொட்டு
கன்னியின் மனதை பெற வேண்டும்
கன்னியின் மனதை பெற வேண்டும்

உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்

செக்கச்சிவந்த கன்னமிரண்டு
சக்கரையோ இல்லை கற்கண்டோ
சக்கரையோ இல்லை கற்கண்டோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ
பருவம் வந்ததும் பக்கம் வந்தவர்
பாவலனோ இல்லை காவலனோ
பாவலனோ இல்லை காவலனோ

என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் நானாகும்
உன்னை பார்த்து எதைப் பார்த்தாலும்
எதுவும் தேனாகும்
எதுவும் நானாகும் !
எதுவும் தேனாகும்

Monday, August 18, 2008

ராஜாத்தி காத்திருந்தா....

ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா
மான் கொடுத்த‌ க‌ண்க‌ளுக்கு மை கொடுக்க‌ வா மாமா
ம‌யக்க‌த்தில் இருக்கையிலே கை கொடுக்க‌ வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

சின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா
சின்னப்பெண் வாச‌லுக்கு சீர் எடுத்து வ‌ர‌லாமா
ஊரெல்லாம் போய் வ‌ர‌வே தேர் எடுத்து வ‌ர‌லாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

ஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா
ஆடியிலே அரும்பானேன் ஆவ‌ணியில் ம‌ல‌ரானேன்
புர‌ட்டாசி போன‌ பின்னே ஐப்ப‌சியில் வா மாமா
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
வா மாமா வா மாமா வா மாமா வா மாமா !
வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா வ‌ர‌லாமா ?
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய் !

நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே
நீ முடிச்ச கூந்த‌த‌லுக்கு பூ முடிக்க‌ வ‌ருவேனே
நாள் பார்த்து ந‌ல‌ம் பார்த்து கை பிடிக்க‌ வ‌ருவேனே
காலங்கள் மாறிப் போகும் காதல் மட்டும் மாறுவதில்லை
ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி ராஜாத்தி !
ராஜாவே ராஜாவே ராஜாவே ராஜாவே !
ராஜாத்தி காத்திருந்தா ரோஜாபோலே பூத்திருந்தா
ராஜாவும் ஓடி வந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ஹா ஹா ஹாய்ய்

தாயின் மடியில் தலை வைத்திருந்தால் ..

எத்தனை செல்வங்கள் வந்தாலுமே
எத்தனை இன்பங்கள் தந்தாலுமே
அத்தனையும் ஒரு தாயாகுமா
அம்மா ! அம்மா! அம்மா !
எனக்கது நீயாகுமா ?

தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

தாயின் வ‌டிவில் தெய்வத்தைக் க‌ண்டால்
வேறொரு தெய்வ‌மில்லை வேறொரு தெய்வ‌மில்லை
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

ப‌த்துமாத‌ம் பொறுமை வ‌ள‌ர்த்தே
பூமியை மிஞ்சிடுவாள் பூமியை மிஞ்சிடுவாள்
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
வெள்ளை ம‌ன‌தை தொட்டிலாக்கி
பிள்ளையைக் கொஞ்சிடுவாள் பிள்ளையைக் கொஞ்சிடுவாள்
தாயின் ம‌டியில் த‌லை வைத்திருந்தால்
துய‌ர‌ம் தெரிவ‌தில்லை

அன்பில் ம‌ல‌ரும் அற்புதம் எல்லாம்
அன்னையின் விளையாட்டு அலையும்
ம‌ன‌தை அமைதியில் வைப்ப‌து
அன்னையின் தாலாட்டு
என்னைப் பார்த்த‌ அன்னை முக‌த்தை
ஏழை பார்த்த‌தில்லை
க‌ண்ணே க‌ண்ணே க‌ண்ணே
என்று கொஞ்சிய‌ வார்த்தை
காதில் கேட்ட‌தில்லை காதில் கேட்ட‌தில்லை
காதில் கேட்ட‌தில்லை !

கள்ளிருக்கும் ரோஜாமலர் ...

கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
கன்னத்திலே இளமை மின்னுவதைப் பாரு
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஒய்ய் ஒய்ய்ய் ஒய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்

வானத்திலே வெள்ளி நிலா
வானத்திலே வெள்ளி நிலா வட்டமிடும் போது
வஞ்சி மனம் பஞ்சணையில் பஞ்சு படும் பாடு
காதலுக்கு வெட்கமில்லை
கண்ணிருந்தும் தூக்கமில்லை
கட்டழகைப் பாரு பொட்டழகைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய்


நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
நேற்றுவரை நானிருந்த நிலைமையெல்லாம் வேறு
பார்த்தவுடன் நீ கொடுத்த பருவமலர் நூறு
பால்வடியும் உனது முகம் பாடுபடும் எனது மனம்
பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை பாடிவந்தாய் பாவை ஓடிவந்தேன்
காளை ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கண்ணுகுள்ளே பெண்ணழகு ஆடுவதைப் பாரு

இன்று என்றும் நாளையென்றும் ஓடிச்செல்லும் காலம்
எந்நாளும் மாறாது காதலென்னும் கோலம்
தென்றலுக்கு ஓய்வுமில்லை சேர்ந்தவர்க்கு ஏக்கமில்லை
ஒன்றுபடும் போது இன்ப சுகம் கோடி
இன்ப சுகம் கோடி ஓய்ய் ஓய்ய் ஓய்ய்


கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு
உன்னிடமே நெஞ்சம் ஓடுவதைப் பாரு
ஓய்ய் ஓய்ய் ஓய்ய்
கள்ளிருக்கும் ரோஜாமலர் துள்ளுவதைப் பாரு !