காமுகர் நெஞ்சில் நீதியில்லை
அவர்க்கு தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை
காமுகர் நெஞ்சில் நீதியில்லை
தீமைகள் போல் அவர்க்கு செல்வமில்லை
கொலை செய்வதை போல் ஒரு இன்பமில்லை
மாதர்கள் வாழ்வில் காவலுமில்லை
மானமும் ஜீவனும் வாழ்வதும் இல்லை
(காமுகர் நெஞ்சில் ..)
காவியம் போற்றுகிற வீரமெல்லாம்
வளர் காவிரி மண்டல செல்வமன்றோ
தீரர்களாலே சீர்படும் நாடும்
தீயவர் கால்களில் பாழ்படும் அன்றோ
(காமுகர் நெஞ்சில் ...)