கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
தாயின் வடிவில் வந்து
என் தெய்வம் கண்ணில் தெரியும்
அவள் தாழ் பணிந்து எழுந்தால்
நம் தொழிலில் மேன்மை விளையும்
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உயரும் போது
இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ
ஊருக்காக உழைக்கும் கைகள்
உயர்ந்திட வேண்டாமோ
அவை உயரும் போது
இமயம் போலத் தெரிந்திட வேண்டாமோ
பிறருக்காக வாழும் நெஞ்சம்
விரிந்திட வேண்டாமோ
அது விரிந்திடும் போது
குன்றினைப் போல நிமிர்ந்திட வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
வேலும் வாளும் சுழன்றிட வேண்டும்
வீரரின் விளையாட்டில்
அது நாளும் காணும் பரம்பரை வழக்கம்
தென்னவர் திருநாட்டில்
நாடும் வீடும் நம்மால் என்றும்
நலம் பெற வேண்டாமோ
அந்த கடமைக்காக உடலும் மனமும்
பலம் பெற வேண்டாமோ
கடவுள் வாழ்த்து பாடும்
இளங்காலை நேரக் காற்று
என் கைகள் வணக்கம் சொல்லும்
செங்கதிரவனைப் பார்த்து
கதிரவனைப் பார்த்து !
பாடல் :வாலி
இசை:எம்.எஸ்.விசுவநாதன்
பாடியவர்:டி.எம் .சௌந்தராஜன்
Wednesday, September 17, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் வருகைக்கு நன்றி