Tuesday, December 13, 2011

அன்னமிட்டகை

அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை


இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன்  உழைப்பாலே உண்ண வேண்டும்
இல்லாமை நீக்க வேண்டும்
தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும்
நல் எண்ணம் வேண்டும்
தன் உழைப்பாலே உண்ண வேண்டும்


பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை


பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து
பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க


வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை
அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி


அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து
உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை
நம்மை ஆக்கிவிட்ட கை





இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்